கனமழையால் ஸ்லோவேனியாவில் குகையில் சிக்கிய ஐவர்: மீட்பு பணிகள் தீவிரம்
மத்திய ஸ்லோவேனியாவில் கடந்த சனிக்கிழமை பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 5 பேர் குகையில் சிக்கியுள்ளதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு வழிகாட்டிகளுடன் மூன்று பெரியவர்களைக் கொண்ட ஒரு குடும்பம் சனிக்கிழமை காலை தலைநகரான லுப்லஜானாவிற்கு தெற்கே 50 கிமீ தொலைவில் உள்ள கிரிஸ்னா ஜமாவிற்கு சுற்றுலா சென்ற போது இந்த விபத்து நேர்ந்துள்ளது.
ஐவரும் நலமாக உள்ளனர் என்று ஸ்லோவேனியாவின் ஸ்பெலியாலாஜிக்கல் அசோசியேஷன் தலைவர் இகோர் பென்கோ தெரிவித்தார்.
மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
(Visited 12 times, 1 visits today)





