இந்தியா செய்தி

பிறந்தநாள் அன்று தற்கொலை செய்து கொண்ட பிரபல நடிகை

இந்திய சினிமாவின் பிரபல மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவனந்தபுரம் பகுதியில் உள்ள வீட்டில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இறக்கும் போது அவளுக்கு 35 வயது. இந்த வீட்டில் ரெஞ்சுஷா மேனன் தனது கணவருடன் வசித்து வந்தார் என்பது கூடுதல் தகவல்.

அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மாதம் மற்றொரு மலையாள நடிகை அபர்ணா நாயர் தற்கொலை செய்து கொண்ட சோகம் மறைவதற்குள் ரெஞ்சுஷா மேனன் தற்கொலை செய்தி வெளிவந்துள்ளன.

கடந்த சில வருடங்களாக ரெஞ்சுஷா மேனன் நிதி பிரச்சினையில் இருந்ததாக சொல்லப்படுகின்றன.

கொச்சியை பூர்விகமாகக் கொண்ட ரெஞ்சுஷா மேனன், தொழில்முறை பரதநாட்டிய நடனக் கலைஞர். தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

ரெஞ்சுஷா மேனன், கடந்த சில மாதங்களாகவே மன அழுத்தத்தில் இருப்பதுபோல சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்ததை ரசிகர்கள் நினைவுகூர்ந்துள்ளனர்.

இன்று ரெஞ்சுஷாவுக்கு பிறந்தநாள். பிறந்தநாளை கொண்டாட வேண்டிய அவர் மரணம் அடைந்துள்ளது மலையாள திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 6 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content