கனடா துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் நேரில் பார்த்த நபரின் சாட்சியம்!
கனடாவில் இடம்பெற்ற மோசமான துப்பாக்கிச்சூட்டை நேரில் பார்த்த ஒருவர் இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய 18 வயதான தாக்குதல்தாரி தனது குடும்ப உறுப்பினர்களை கொலை செய்யும் இலக்குடன் பாடசாலைக்குள் நுழைந்திருக்கலாம் எனக் கூறியுள்ளார்.
அதாவது ஏனையவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்னதாக அவர் தனது தாயையும், வளர்ப்பு சகோதரனையும் சுட்டுக் கொன்றதாக தெரிவித்துள்ளார்.
அதற்கு பின்னர் ஐந்து மாணவர்களையும் ஒரு ஆசிரியரையும் சுட்டுக் கொன்றதோடு, தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறினார்.
இந்தத் தாக்குதலுக்கான காரணத்தை பொலிஸார் இன்னும் அறிவிக்கவில்லை. இருப்பினும் உயிரிழந்தவர்களில் ஜெஸ்ஸி வான் ரூட்ஸீலரின் குடும்பத்தினர் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




