பொழுதுபோக்கு

பாலிவுட் மாஸ் ஹீரோவின் தங்கை வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தங்கை அர்பிதா கானின் வீட்டில் விலை உயர்ந்த வைர கம்மல்களை வீட்டில் வேலை செய்து வந்த நபர் திருடியதாக கடந்த மே 16ம் தேதி போலீஸ் நிலையத்தில் அர்பிதா கான் மற்றும் அவரது கணவர் புகார் அளித்துள்ளனர்.

அர்பிதா கானின் புகாரை விசாரித்த போலீஸார் குற்றவாளியை உடனடியாக கைது செய்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அர்பிதா கான் மும்பையில் உள்ள கர் பகுதியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் கடந்த 4 மாதங்களாக பணியாற்றி வந்த வேலைக்காரர் ஒருவர் வீட்டில் இருந்து வெளியேறுவது குறித்து யாரிடமும் சொல்லாமல் சென்றிருக்கிறார்.

டிரெஸ்ஸிங் டேபிளில் உள்ள டிராவில் வைக்கப்பட்டிருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு ஜோடி வைர கம்மல் காணாமல் போனதை அறிந்த அர்பிதா உடனடியாக காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்துள்ளார்.

அர்பிதா கான் வீட்டில் சுமார் 11 பணியாட்கள் உள்ளனர். அதில், கடந்த 4 மாதங்களுக்கு முன்னதாக வேலைக்கு சேர்ந்த சந்திப் ஹெக்டே எனும் 30 வயதான நபர் வீட்டில் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் சம்பவம் நடந்த அன்று சீக்கிரமே கிளம்பிச் சென்றிருக்கிறார்.

இதுகுறித்து கர் நிலைய காவல்துறை அதிகாரிகளிடம் அர்பிதா கான் தகவல் அளித்த நிலையில், கிழக்கு வில்லே பார்லே பகுதியில் உள்ள ஸ்லம் ஏரியாவில் வசித்து வந்த அந்த வேலைக்காரர் வீட்டுக்குச் சென்று விசாரித்ததில் 5 லட்சம் மதிப்புள்ள வைரக் கம்மல் அவரிடம் இருந்ததை பார்த்து போலீஸார் அதை கைப்பற்றி அவரை கைது செய்துள்ளனர்.

(Visited 7 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்