நடிகர் பிரகாஷ் ராஜ் உட்பட 29 பேர் மீது பாய்ந்தது வழக்கு

சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 நடிகர்கள் மீது அமுலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
சட்டவிரோத சூதாட்ட செயலிகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு அளிப்போர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, நுகர்வோர் துறை அமைச்சகம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
மேலும், இணைய விளம்பரங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 நடிகர்கள் மீது அமுலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
குறித்த நடிகர்கள், விசாரணைக்கு நேரில் முன்னிலையாகுமாறு, அமுலாக்கத்துறை அறிவித்தல் அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
(Visited 2 times, 2 visits today)