அமெரிக்காவின் சில பகுதிகளில் அவசரக்காலநிலை பிறப்பிப்பு!
அமெரிக்காவில் சுமார் 30 மில்லியன் மக்கள் பனிப்புயல் எச்சரிக்கையின் கீழ் உள்ளனர்.
இதன்காரணமாக ஏற்கனவே 1000 இற்கும் மேற்பட்ட விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளதாகவும், பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வகையான பயணங்களும் கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த அமைப்பு பரவலான மின் தடைகளுக்கும் வழிவகுக்கும் என முன்னெச்சரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மேற்படி பனிப்புயல் காரணமாக நியூ ஜெர்சியில் (New Jersey) அவசரக்கால நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி
நியூயார்கை தாக்கும் பனிப்புயல் : மில்லியன் கணக்கான மக்களுக்கு எச்சரிக்கை!




