நியூசிலாந்தின் சில பகுதிகளில் அவசரநிலை அறிவிப்பு – பல இடங்களில் மின் துண்டிப்பு!
நியூசிலாந்தில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெலிங்டனில் இரவு முழுவதும் மணிக்கு 193 கிமீ வேகத்தில் காற்று வீசியதாகவும், மரங்கள் முறிந்து விழுந்து சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் வெலிங்டனில் சுமார் 10,000 வாடிக்கையாளர்கள் உட்பட, பிராந்தியம் முழுவதும் 30,000 க்கும் மேற்பட்ட சொத்துக்களுக்கு மின் துண்டிப்பு அமுற்படுத்தப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் வெலிங்டனில் இருந்து புறப்படும் பெரும்பாலான விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாகவும் விமான நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஓட்டோரோஹங்கா (Otorohanga) , வைபா (Waipa), தரருவா (Tararua), ரங்கிடிகே (Rangitikei ) மற்றும் மனாவட்டு (Manawatu ) மாவட்டங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.





