இலங்கை செய்தி

மட்டக்களப்பு-நாவலடி கடற்கரையில் கரையொதுங்கிய ஆணொருவரின் சடலம்

மட்டக்களப்பு,நாவலடி கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் ஆனொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு கருவெப்பங்கேணியை வசிப்பிடமாக கொண்ட 89 வயதுடைய உ.விஜயரத்ன என்பவரே நாவலடி கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் காலை 11.00 மணியளவில் நாவலடியில் உள்ள தனது மகனின் வீட்டிற்கு வருகை தந்திருந்த இவர் மாலை வேளையில் காணாமல் போயிருந்த நிலையில் நாவலடி மயானத்திற்கு முன்பாக உள்ள கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளிற்கு அமைவாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரனை அதிகாரி த.தவக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன், பிரதே பரிசோதனைகளின் பின்னர் நெருங்கிய உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைக்குமாறு பொலிசாரிற்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

(Visited 10 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!