இலங்கையில் கைதான 10 இந்திய மீனவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 10 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைதான மீனவர்கள் இன்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, அவர்களை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கைதான 10 பேரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மயிலிட்டி கடற்றொழில் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
இதனையடுத்து குறித்த 10 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
(Visited 45 times, 1 visits today)





