உலகம் செய்தி

தைவானின் ஐபோன் தயாரிப்பாளரிடம் சீனா விசாரணை

தைவானின் ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ்கான் மீது சீனா விசாரணையை தொடங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, சீனாவின் ஹெனான் மற்றும் ஹூபே ஆகிய இரண்டு மாகாணங்களில் உள்ள Foxconn வர்த்தக நிறுவனங்களின் அதிகாரிகள் வரி சோதனைகளை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விசாரணைக்கு ஒத்துழைப்பதாக ஃபாக்ஸ்கான் கூறுகிறது.

சீனாவின் இயற்கை வளங்கள் திணைக்களம் Foxconn வணிகங்களின் நிலப் பயன்பாடு குறித்து ஆன்-சைட் ஆய்வுகளை நடத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஃபாக்ஸ்கான் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும் என்பதுடன், ஆப்பிள் நிறுவனத்திற்காக ஐபோன்களை உற்பத்தி செய்கிறமை குறிப்பிடத்தக்கது.

(Visited 6 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!