இலங்கை செய்தி

பிரித்தானியாவில் இடம்பெற்ற மிகப்பெரிய பணக் கொள்ளை – இன்னும் தீர்வு கிடைக்காதது ஏன்?

பிரித்தானியாவில் நடந்த மிகப்பெரிய பணக் கொள்ளை சம்பவமாக கருதப்படும் செக்யூரிட்டாஸ் டிப்போவி [Securitas Depot] கொள்ளை இடம்பெற்று20 ஆண்டுகள் நிறைவடைந்த போதிலும் வழக்கு இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டு பெப்ரவரி ஆம் திகதி 21 அன்று, கென்ட் [Kent] பகுதியில் உள்ள டொன்பிரிட்ஜ் [Tonbridge] நகரில் இந்த கொள்ளை சம்பவம் நடந்தது.

ஆயுதங்களுடன் வந்த கும்பல், முகாமையாளரை அவரது மனைவி மற்றும் குழந்தையுடன் கடத்தினர்.
பின்னர் அவரை பயன்படுத்தி பணம் இருக்கும் இடத்திற்குள் சென்றுள்ளனர் நுழைந்தனர்.

2008 ஆம் ஆண்டு லண்டனில் உள்ள ஓல்ட் பெய்லி [Old Bailey] நீதிமன்றத்தில் நடைபெற்ற பிரதான விசாரணையில் ஐவர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர்.

ஸ்டூவர்ட் ராய்ல் [Stuart Royle], லியா ருஷா [Lea Ruzha], ஜெட்மிர் புக்பாபா [Jetmir Buqbuqa], ரோஜர் கவுட்ஸ் [Roger Coutts], மற்றும் எமிர் ஹைசெனாஜ் [Emir Hysenaj] ஆகியோர் சிறைத்தண்டனையு் பெற்றனர்.

இருப்பினும், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் ஒரு பகுதி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால், இந்த வழக்கு இன்னும்
முழுமையாக முடிவுக்கு வரவில்லை என கூறப்படுகிறது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!