பிரித்தானியாவில் இடம்பெற்ற மிகப்பெரிய பணக் கொள்ளை – இன்னும் தீர்வு கிடைக்காதது ஏன்?
பிரித்தானியாவில் நடந்த மிகப்பெரிய பணக் கொள்ளை சம்பவமாக கருதப்படும் செக்யூரிட்டாஸ் டிப்போவி [Securitas Depot] கொள்ளை இடம்பெற்று20 ஆண்டுகள் நிறைவடைந்த போதிலும் வழக்கு இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு பெப்ரவரி ஆம் திகதி 21 அன்று, கென்ட் [Kent] பகுதியில் உள்ள டொன்பிரிட்ஜ் [Tonbridge] நகரில் இந்த கொள்ளை சம்பவம் நடந்தது.
ஆயுதங்களுடன் வந்த கும்பல், முகாமையாளரை அவரது மனைவி மற்றும் குழந்தையுடன் கடத்தினர்.
பின்னர் அவரை பயன்படுத்தி பணம் இருக்கும் இடத்திற்குள் சென்றுள்ளனர் நுழைந்தனர்.
2008 ஆம் ஆண்டு லண்டனில் உள்ள ஓல்ட் பெய்லி [Old Bailey] நீதிமன்றத்தில் நடைபெற்ற பிரதான விசாரணையில் ஐவர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர்.
ஸ்டூவர்ட் ராய்ல் [Stuart Royle], லியா ருஷா [Lea Ruzha], ஜெட்மிர் புக்பாபா [Jetmir Buqbuqa], ரோஜர் கவுட்ஸ் [Roger Coutts], மற்றும் எமிர் ஹைசெனாஜ் [Emir Hysenaj] ஆகியோர் சிறைத்தண்டனையு் பெற்றனர்.
இருப்பினும், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் ஒரு பகுதி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால், இந்த வழக்கு இன்னும்
முழுமையாக முடிவுக்கு வரவில்லை என கூறப்படுகிறது.





