உலகம்

வடமேற்கு நைஜீரியாவில் கோர விபத்து – 30 பேர் பலி!

வடமேற்கு நைஜீரியாவில் நேற்று இடம்பெற்ற சாலை விபத்தில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கனோ மாநிலத்தின் கெசாவா (Gezawa) பகுதியில் உள்ள குவானர் பார்டேயில் (Kwanar Barde) இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

டிரக் ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படும் அதேவேளை விபத்தில் வேறு எந்த வாகனங்களும் தொடர்புபட்டுள்ளதாக கூறப்படவில்லை.

குறிப்பாக டிரக் ரக வாகன சாரதியின் பொறுப்பற்ற நடவடிக்கையே விபத்திற்கு காரணம் என ஆளுநர் அப்பா யூசுப் (Abba Yusuf ) குறிப்பிட்டுள்ளார்.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!