பொழுதுபோக்கு

“இந்த படத்திலாவது அஜித் – த்ரிஷா இணைவது போல இருக்க வேண்டும்” ரசிகர்களின் ஏக்கம்

அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் மீண்டும் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கியதாம். இதில் அஜித் ஜோடியாக த்ரிஷா நடித்து வருவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கியது. லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் விடாமுயற்சி, ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் இருக்கும் என சொல்லப்படுகிறது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

அஜித்துடன் த்ரிஷா, ப்ரியா பவானி சங்கர், ரெஜினா, அர்ஜுன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். கடந்த மாதம் அஜர்பைஜானில் தொடங்கிய விடாமுயற்சி ஃபர்ஸ்ட்

ஷெட்யூல் ஷூட்டிங் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பும் அஜர்பைஜானில் தான் தொடங்கவுள்ளதாம்.

இந்நிலையில், அஜித் – த்ரிஷா ஜோடி குறித்து ரசிகர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதாவது, அஜித் – த்ரிஷா இணைந்து இதுவரை 4 படங்களில் நடித்துள்ளனர். ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் ஆகிய படங்களில் அஜித் – த்ரிஷா ஜோடி நடித்துள்ளது.

ஆனால் ஒரு படத்தில் கூட அவர்கள் இணைவதாக க்ளைமேக்ஸ் அமையவில்லை என்பதே ரசிகர்களின் பெரும் கவலையாக உள்ளது. இருவரும் காதலிப்பதாக மட்டுமே பார்க்க முடிந்தது. தெரிந்தோ தெரியாமலோ இதுவொரு சென்டிமெண்டாக தொடர்கிறது.

இந்த சோகம் விடாமுயற்சி படத்திலும் தொடரக் கூடாது என ரசிகர்கள் விரும்புகின்றனர். அதாவது அஜித் – த்ரிஷா இருவரும் விடாமுயற்சி படத்திலாவது இறுதியில் மகிழ்ச்சியாக இணைவது போல இருக்க வேண்டும்.

அவர்கள் பிரிவது மாதிரி விடாமுயற்சி க்ளைமேக்ஸ் இருக்கக் கூடாது என சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content