ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்திய வெடிகுண்டு மிரட்டல் – மூடப்பட்ட பாடசாலை

ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு நகரில் மின்னஞ்சல் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பாடசாலை ஒன்று மாணவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், மறு அறிவிப்பு வரும் வரை மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்க்குமாறும் பாடசாலைநிர்வாகம் பெற்றோருக்கு அறிவித்துள்ளது.

அடிலெய்டின் கிழக்கில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் ஆரம்பப் பாடசாலைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த ஒரு வாரமாக பல பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெற்கு அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் நிலைமையில் அதிகரிப்பு காணப்படுவதாக தெற்கு அவுஸ்திரேலிய பொலிஸார் அறிவித்துள்ளனர்.

எந்தவொரு நிறுவனத்திற்கும் இதுபோன்ற அச்சுறுத்தல் கிடைத்தால் உடனடியாக சரியான பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!