பிரேசில் கடற்பரப்பில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள்!
![](https://iftamil.com/wp-content/uploads/2024/04/brezil-jpg.webp)
பிரேசிலின் வடகிழக்கு கடற்பகுதியில் படகு ஒன்றில் ஏராளமான சிதைந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அங்கு கிட்டத்தட்ட 20 சடலங்கள் இருப்பதாக ஊகிக்கப்படுவதாக அந்த செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.
சடலங்கள் அழுகியதால் படகில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது சரியாகத் தெரியவில்லை என பிரேசில் அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
புலனாய்வாளர்கள் குழு பிரேசிலியர்களாக இருக்க முடியாது என்று ஊகிக்கப்படுவதுடன், அவர்கள் பெரும்பாலும் கரீபியன் நாட்டிலிருந்து வந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
(Visited 7 times, 1 visits today)