ஐரோப்பா

ஜெர்மனியில் வீடொன்றில் மீட்கப்பட்ட தாய் மற்றும் 2 பிள்ளைகளின் சடலங்கள்

ஜெர்மனியில் வீடு ஒன்றில் இருந்து தாய் மற்றும் 2 பிள்ளைகளின் இறந்த உடல்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த 18 ஆம் திகதி ஜெர்மனியின் நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் உள்ள ஹேட்றன் என்ற நகரத்தில் 37 வயதுடைய தாய் , 5 வயது மற்றும் 7 வயதுடைய இரண்டு சிறுமிகள் படுங்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்கள் வசித்து வந்த வீட்டில் இறந்த நிலையில் 3 பேரின் சடலங்கள் மீட்க்கப்பட்டுள்ளது.

இந்த குடும்பமானது அண்மையில் இந்த வீட்டுக்கு குடிபுகுந்ததாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அயல் துருக்கி நாட்டு வம்சவழியை கொண்டவர்கள் இந்த குடும்பத்துடன் உறவை ஏற்படுத்த முயற்சித்த பொழுது தொடர்பு துண்டிக்கப்பட்ட காரணத்தினால் இவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொாலிஸார் இறந்த சடலங்களை மீட்டுள்ளனர்.

இந்நிலையில் இறந்த பெண்ணின் 37 வயதுடைய கணவரை மால் என்ற பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் இந்த 3 கொலை தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்