IS அமைப்புடன் தொடர்புடையவர் ஆஸ்திரேலியா வர தடை விதிப்பு!
ISIS அமைப்புடன் தொடர்புடையவர் என கருதப்படும் நபரை நாடு திரும்புவதற்கு ஆஸ்திரேலியா Australia தற்காலிக தடை விதித்துள்ளது.
அந்நாட்டு உள்துறை அமைச்சர் Home Affairs Minister Tony Burke இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
வடகிழக்குசிரியாவில் உள்ள அல்-ரோஜ் முகாமிலிருந்து 11 பெண்கள் மற்றும் 23 குழந்தைகள் உட்பட மொத்தம் 34 ஆஸ்திரேலியர்கள் Damascus வழியாக ஆஸ்திரேலியா வருவதற்கு முயற்சித்துள்ளனர்.
இவர்களில் ஒருவருக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைப்புகளின் ஆலோசனையின் பேரிலேயே குறித்த நபருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
மேற்படி 34 பேரில் ஒருவருக்கு மட்டுமே இந்த தற்காலிகத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏனையோர் தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை.
எனினும், இவர்களை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துவருவதற்கு எவ்வித இராஜதந்திர உதவியும் வழங்கப்படமாட்டாது என பிரதமர் Anthony Albanese நேற்று அறிவித்தார்.





