ஆசியா செய்தி

சிறையிலிருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்ட ஆங் சான் சூகி

மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி, இராணுவ ஆட்சியின் காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சுமார் ஒரு வருட காலம் தனிமைச் சிறை முகாமில் அடைக்கப்பட்டிருந்த ஆங் சான் சூகி தற்போது அரசாங்க கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இராணுவ ஆட்சிக்கு பிறகு நடந்த விசாரணைகளை அடுத்து ஆங் சான் சூகிக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு இப்போது 78 வயதாகிறது.

கடந்த 2 வருடங்களாக ஆங் சான் சூகியின் உடல் நிலை குறித்தும், அவரது உடல் நிலை குறித்தும் எந்த அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆங் சான் சூகியின் உடல் நிலை தொடர்பான சர்வதேச அழுத்தங்கள் காரணமாக அவரை வீட்டுக் காவலில் வைக்க மியன்மார் இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!