பொழுதுபோக்கு

சித்தப்பாவின் கால்மாட்டிலேயே கண்ணீருடன் நின்ற அதர்வா.. வைரலாகும் காட்சி

அப்பாவை போலவே சித்தாப்பாவும் சீக்கிரமே உயிரிழந்த சோகத்தில் நடிகர் அதர்வா மற்றும் அவரது தம்பி ஆகாஷ் இருவரும் டேனியல் பாலாஜியின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.

உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த டேனியல் பாலாஜி நேற்று இரவு 11 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், உயிரிழந்தார்.

கருப்பு நிற சட்டை, தாடி, கண்ணாடியுடன் ஆளே வித்தியாசமாக மாறிய தோற்றத்தில் நடிகர் அதர்வா தனது சித்தப்பா டேனியல் பாலாஜியின் இறுதிச்சடங்கில் கலந்துக்கொண்டார்.

கடந்த 2010ம் ஆண்டு மே 19ம் தேதி 46 வயதிலேயே நடிகர் முரளி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மரணம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. முரளியின் அம்மாவின் சகோதரி மகனான டேனியல் பாலாஜியும் தற்போது 48 வயதான நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இந்த நிலையில், தனது சித்தப்பா டேனியல் பாலாஜி மறைந்த செய்தியை அறிந்ததும் தம்பியுடன் வந்த அதர்வா சித்தப்பா கால்மாட்டிலேயே வெகு நேரம் நின்று கண்ணீர் மல்க அவருக்கு அஞ்சலி செலுத்திய காட்சிகள் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தின.

(Visited 75 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!