இலங்கை செய்தி

மல்லாவியில் தியாக தீபம் திலீபனுக்கு பொதுமக்களால் வழங்கப்பட்ட உணர்வு பூர்வ அஞ்சலி

தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு கடந்த 15 ஆம் திகதி பொத்துவில்லில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் ஆரம்பிக்கப்பட்ட ஊர்தி பவனியானது கிழக்கு மாகாணத்தில் இருந்து வடக்கு மாகாணத்திற்கு வருகை தந்து, வடக்கு மாகாணத்தின், பல்வேறு பகுதிகளுக்கும், சென்று வருகின்றது.

அந்தவகையில் இன்று எட்டாவது நாள் மன்னார் மாவட்டத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்த ஊர்தி பவனியானது மன்னாரிலிருந்து வெள்ளாங்குளம் ஊடாக மல்லாவியை வந்தடைந்து மல்லாவியினுடைய பல்வேறு பகுதிகளிற்கும் பாண்டியன்குளம் உள்ளிட்ட பகுதிகளிற்கும் சென்று மக்களது அஞ்சலியை தொடர்ந்து இன்றைய எட்டாம்நாள் பயணம் மல்லாவியுடன் நிறைவு பெற்றது.

நாளையதினம் வடமராட்சி கிழக்கில், இந்த ஊர்தி பவனி மக்கள் அஞ்சலிக்காக செல்ல இருக்கின்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல மல்லாவிக்கு வருகை தந்த ஊர்திக்கு, இன்றைய தினம் மல்லாவி, துணுக்காய், மாந்தை கிழக்கு, பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த, பல்வேறு இடங்களிலும் மக்கள் உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தி இருந்தனர்

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!