பொழுதுபோக்கு

24 வருடங்களுக்குப் பிறகு மாதவனை சந்தித்த ஷாலினி… வைரலாகும் படங்கள்

குழந்தை நட்சத்திரமாக ஏராளமான படங்களில் நடித்து பின் மலையாள படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஷாலினி.

அந்த படம் தான் தமிழில் காதலுக்கு மரியாதை என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. விஜய்யுடன் இணைந்து அப்படம் மூலம் ஷாலினி தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இந்த படத்தின் பின் ஷாலினியின் மார்க்கெட் பெரிய அளவில் உயர்ந்தது, தொடர்ந்து அதிக படங்களிலும் நடித்து வந்தார்.

1999ம் ஆண்டு அஜித்துடன் அமர்க்களம் படத்தில் ஜோடி சேர்ந்து நடிக்க அவரது வாழ்க்கையே மாறியது. அஜித்துடன் காதல் ஏற்பட இருவரும் திருமணம் செய்துகொள்ள ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும், அமர்க்களம், காதலுக்கு மரியாதை என 5 படங்களில் நாயகியாக நடித்தவர் பின் சினிமாவை விட்டு விலகினார்.

சில வருடங்களுக்கு முன் இன்ஸ்டா பக்கம் வந்த ஷாலினி, அவ்வப்போது நிறைய புகைப்படங்கள் வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.

அண்மையில் நடிகர் மாதவனை நேரில் சந்தித்துள்ள ஷாலினி அவருடன் புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

See also  “டில்லி விரைவில் திரும்ப வருவார்" லோகேஷ் மாஸ் அப்டேட்

24 வருடங்களுக்கு பிறகு இருவரும் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் செம வைரலாகி வருகிறது.

(Visited 3 times, 3 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content