கொழும்பில் களமிறங்கினார் அமெரிக்க கடற்படை கட்டளைத் தளபதி!
அமெரிக்க பசுபிக் கடற்படையின் கட்டளைத் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர் Admiral Steve Koehler மூன்று நாட்கள் பயணமாக இன்று (19) இலங்கை வந்தார்.
21 ஆம் திகதிவரை நாட்டில் தங்கி இருக்கும் அவர் அரச அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளுடன், பேச்சுக்களை நடத்துவார் என அமெரிக்க தூதுரகம் தெரிவித்துள்ளது.
கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிராந்திய உறுதித்தன்மையில் ஒத்துழைப்பு மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு என்பன பற்றியே அவர் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தப் பயணம், உலகளாவிய முக்கிய கடல் வழித்தடங்களில் இலங்கையின் இருப்பிடத்துக்கு அமெரிக்கா அளிக்கும் மூலோபாய முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்தப் பயணம் அமெரிக்காவுக்கும், இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.





