பொழுதுபோக்கு

பட வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் வாரிசு நடிகை – ஒல்லி நடிகரால் நடந்த சோகம்

சினிமாவில் வாரிசு நடிகர், நடிகைகளாக இருந்தாலும் திறமை இருந்தால் தான் ஜொலிக்க முடியும். அவ்வாறு வாரிசு நடிகை ஒருவர் ஒல்லி நடிகரின் படத்தில் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்‌.

முதல் படமே பெரிய நடிகரின் படம் என்பதால் தன்னுடைய திரை வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என்று நினைத்தார். ஆனால் படத்தில் ரொமான்ஸ் காட்சிகளை தவிர பெரிதாக எதுவும் இல்லை.

இதனால் நடிகைக்கு கெட்ட பெயர் மட்டுமல்லாமல் படமும் பிளாப் ஆகிவிட்டது. முதல் படமே தோல்வி அடைந்த நிலையில் ராசி இல்லாத நடிகை என முத்திரை குத்தப்பட்டார்.

இதை அடுத்து வாரிசு நடிகைக்கு நான்கு வருடங்களாக பட வாய்ப்பு இல்லாமல் இருந்து உள்ளார். இதனால் தனது திரை வாழ்க்கையை இருண்டு போய்விட்டது என்றும் கூறியுள்ளார்.

அதன் பிறகு எப்படியோ ஒரு பட வாய்ப்பு கிடைக்க அதன் வழியாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். ஆனாலும் அப்பா அளவுக்கு நடிகையால் பேர் வாங்க முடியவில்லை.

மேலும் தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்பு வராததால் அக்கட தேச படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதுவும் எடுபடாமல் போய்விட்டது.

வாரிசு நடிகையின் அப்பா இந்த வயதிலும் நிக்க கூட நேரம் இல்லாத அளவுக்கு சினிமாவில் படு பிஸியாக இருக்கிறார். அவரது வாரிசு பட வாய்ப்பு இல்லையே என்று புலம்பித் தவிக்கிறார்.

 

(Visited 43 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!