திருகோணமலையில் உலக சுற்றுலா தினத்தினை முன்னிட்டு நடைபெறவுள்ள களியாட்ட நிகழ்வு
![](https://iftamil.com/wp-content/uploads/2023/09/PHOTO-2023-09-22-23-44-44-1280x700.webp)
கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் ஏற்பாட்டில் உலக சுற்றுலா தினத்தினை முன்னிட்டு மாபெரும் களியாட்ட நிகழ்வுகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
இம்மாதம் 27ம் திக்தியில் இருந்து எதிர்வரும்மாதம் 1ம் திகதிவரை திருகோணமலை டச் பே (Dutch Bay Beach) கடற்கரையில் நடாத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் செய்தியாளரகளுக்கு தெளிவூட்டும் வகையிலான் செய்தியாளர் சந்திப்பு இன்று கிழக்கு மாகாண சுற்றுலாப்பணியகத்தில் இடம்பெற்றது
கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் பணிப்பாளர் பி.மதனவாசன், கிழக்கு மாகாண விளையாட்டுத்திணைக்களத்தின் பணிப்பாளர் என்.எம் நௌபீஸ் சுற்றுலாப்பணியகத்தின் முகாமையாளர் நாயகம் ஞானசேகரம் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது இம்மாதம் 27ம் திக்தி தொடக்கம் எதிர்வரும் மாதம் 1ம் திகதி வரையான கலப்பகிதியில்
நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிகழ்வுகள் குறித்து தெளிவுபடுத்தப்பட்டது.
அணிக்கு ஆறு நபர்கள் கொண்ட கடற்கரை கால்ப்பந்து போட்டிகள், அணிக்கு நால்வர் கொண்ட கடற்கரை கபடி போட்டிகள், மரதன் ஓட்டப்போட்டி, மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள சிறுவர் இல்லங்களில் வாழும் சிறார்களுக்கான விசேட போட்டிகள், பட்டத்திருவிழா, உணவுத்திருவிழா, இசைக்கச்சேரிகள் போன்ற களியாட்ட நிகழ்வுளும் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வுகளில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று கிழக்கு மாகாண சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான தம்மாலான ஒத்துழைப்பை வழங்க முன்வர வேண்டும் என்று கிழக்கு மாகாண சுற்றுலாப்பணியகத்தின் பணிப்பாளர் மதனவாசன் தெரிவித்தார்