Site icon Tamil News

இலங்கையில் காதல் விவகாரத்தால் ஏற்பட்ட விபரீதம்

காதல் விவகாரத்தால் ஏற்பட்ட தகராறால் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று காலை இரத்தோட்டை – நிக்லோயாவத்த பிரதேசத்தில் இக்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் தாக்கப்பட்ட நபர் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 39 வயதுடைய நபரே கொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் அப்பகுதியில் வசிக்கும் 05 சந்தேக நபர்களை ரத்தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன்துடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் மகளுடன் ஏற்பட்ட காதல் காரணமாக ஏற்பட்ட தகராறால் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Exit mobile version