இலங்கை

கொழும்பில் முச்சக்கரவண்டியில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலம்

கொழும்பு 07, வோர்ட் பிளேஸில் முச்சக்கரவண்டியில் கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குருதுவத்தை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த 119 தொலைபேசி செய்தியின் பிரகாரம் வோர்ட் பிளேஸ் தேசிய பல் வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தார்.

குறித்த முச்சக்கரவண்டியின் இலக்கத்தை பொலிஸார் மோட்டார் வாகன திணைக்களத்திடம் வினவிய போது அது மித்தெனிய பிரதேசத்தை சேர்ந்த ஒருவருடையது என தெரியவந்துள்ளது.

முச்சக்கரவண்டியின் உரிமையாளரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், முச்சக்கரவண்டியை தனது மைத்துனருக்கு வாடகை வாகனம் நடத்துவதற்காக வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருதுவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!