இலங்கை

இலுக்பதன பிரதேசத்தில் நீரில் மூழ்கி 6 வயது சிறுமி உயிரிழப்பு

பதுரலிய, இலுக்பதன பிரதேசத்தில் அமைந்துள்ள உல்லாச விடுதியின் நீர் தடாகத்தில் நீராடச் சென்ற 6 வயது சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (17) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிவேரிய பிரதேசத்தை சேர்ந்த 6 வயது சிறுமியே உயிரிழந்துள்ளார்.

சிறுமி தமது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குழுவுடன் விடுதியில் இருந்த போது விபத்துக்குள்ளானார்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுரலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!