இலங்கை

விசுவமடுவில் ஐஸ் போதைப் பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் கைது

விசுவமடுவில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவரை இன்று (02.02.2014) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து விசுவமடு பகுதியில் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்ட விஷேட அதிரடி படையினர் 21கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞனை கைது செய்து புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்

இதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் விசுவமடு- ரெட்பானா பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளைஞனை கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இளைஞனை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!