இலங்கையில் கோர விபத்து – மூன்று பேர் பரிதாபமாக பலி

நாரம்மல – கிரியுல்ல பிரதான வீதியில் கிவுல்கல்ல வளைவுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த நபர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டியொன்று பாரவூர்வுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கரவண்டியில் நால்வர் பயணித்த நிலையில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் பாரவூர்தி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
(Visited 18 times, 1 visits today)