நேபாளத்தில் ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளான பேருந்து : 12 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தின் – டாங் மாவட்டத்தில் இடம்பெற்ற சாலை விபத்தில், இரண்டு இந்தியர்கள் உட்பட குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை உறுதி செய்துள்ளது.
பலுபாங்கில் ஒரே இரவில் நடந்த இந்த விபத்தில் இறந்த எட்டு பேரின் அடையாளங்கள் மட்டுமே இதுவரை அறியப்படவில்லை.
“பாங்கேயின் நேபாள்கஞ்சில் இருந்து காத்மாண்டு செல்லும் பயணிகள் பேருந்து, பாலத்தில் இருந்து விலகி ராப்தி ஆற்றில் விழுந்தது. பேருந்து விபத்தில் மேலும் 22 பயணிகள் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
“இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக லமாஹி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன” என்று தலைமை ஆய்வாளர் மேலும் கூறினார்.
(Visited 10 times, 1 visits today)