தமிழ்நாடு

சென்னை- அடையாறு ஆற்றின் குப்பையில் மீட்கப்பட்ட 7 மாத சிசுவின் சடலம்!

சென்னையில் அடையாறு ஆற்றங்கரையோரம் இருந்த குப்பையில் இருந்து ஏழு மாத சிசு உடல் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த சிசுவின் உடலை கைப்பற்றி பொலிஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சைதாப்பேட்டை சத்யா நகர் ஆற்றங்கரை ஓரம் ஒரு இடத்தில் குப்பைகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை ஆற்றங்கரைக்கு வந்த பொதுமக்கள் அங்கு குப்பைக்கு நடுவில் இறந்த நிலையில் 7 மாத சிசு இருந்ததை பார்த்த உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர் .

தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கோட்டூர்புரம் பொலிஸார் சிசு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பொலிஸார் சிசு உடலை வீசி சென்றது யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட நபரை தேடிவருகின்றனர். அடையாறு ஆற்றங்கரையோரம் 7 மாத சிசு உடலை வீசிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 11 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்