ஆசியா

தாமரை வடிவிலான வானியல் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது சீனா

பிரபஞ்சத்தில் வாணவேடிக்கைகளைப் போல ஒளிரும் மர்மமான நிலையற்ற நிகழ்வுகளைக் கண்காணிப்பதற்காக தாமரை வடிவிலான புதிய வானியல் செயற்கைக்கோளை சீனா இன்று விண்ணில் செலுத்தியது.ஐன்ஸ்டீன் புரோப் (EP)என்ற இந்த செயற்கைக்கோள், லாங் மார்ச்-2சி என்ற ராக்கெட் மூலம் தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது.

புதிய எக்ஸ்ரே கண்டறிதல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த செயற்கைக்கோள், வானியல் நிகழ்வுகளை படம்பிடிக்க உள்ளது. செயற்கைக் கோள் சுமார் 1.45 டன் எடை கொண்டது. மலர்ந்த தாமரை போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில், 12 இதழ்கள் மற்றும் இரண்டு மகரந்த தண்டுகள் போன்ற அமைப்புகள் உள்ளன. 12 இதழ்களும் நீண்ட தொலைவை கண்காணித்து படம் பிடிக்கும் எக்ஸ்-ரே தொலைநோக்கிகள் கொண்ட 12 தொகுதிகளாகும். இரண்டு தண்டுகள் போன்ற அமைப்பில் குறுகிய தொலைவை கண்காணிக்கும் எக்ஸ்-ரே தொலைநோக்கிகள் உள்ளன.

இந்த தொலைநோக்கிகள் விண்வெளி கண்காணிப்பு அமைப்பை உருவாக்குகின்றன. இது விஞ்ஞானிகளுக்கு சூப்பர்நோவா வெடிப்புகளிலிருந்து வரும் முதல் ஒளியை படம் பிடிக்க உதவுகிறது. ஈர்ப்பு அலை நிகழ்வுகளுடன் கூடிய எக்ஸ்-ரே சிக்னல்களை தேடி கண்டுபிடிக்கிறது. மேலும் செயலற்ற கருந்துளைகள் மற்றும் பிற மங்கலான நிலையற்ற மற்றும் மாற்றம் அடையக்கூடிய வானியல் பொருட்களை கண்டறிய உதவுகிறது.

See also  கடலில் மூழ்கிய சீனாவின் அணுசக்தி கப்பல் : மறுக்கும் சீனா!

China Launches Einstein Probe: Lotus-Shaped Satellite for Observing Cosmic  Phenomena

கருந்துளைகள் மற்றும் ஈர்ப்பு அலைகள் ஆகியவை ஐன்ஸ்டீன் கோட்பாட்டின் கணிப்புகள் என்பதால், இந்த செயற்கைக்கோளுக்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது என இந்த திட்டத்தின் முதன்மை ஆய்வாளரும், சீன அறிவியல் அகாடமியின் தேசிய வானியல் ஆய்வக ஆராய்ச்சியாளருமான யுவான் வெய்மின் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், “நமது கண்களுக்கு தெரியும் நட்சத்திரங்கள் நிறைந்த வானம் அமைதியாக இருக்கிறது. ஆனால் உண்மையில், பிரபஞ்சத்தில் பல கடுமையான வானியல் செயல்பாடுகள் நடக்கின்றன. அதாவது மிகப்பெரிய நட்சத்திரங்களின் அழிவால் ஏற்படும் வெடிப்புகள், நட்சத்திரங்களை விழுங்கும் கருந்துளைகள் மற்றும் நியூட்ரான் நட்சத்திரங்கள் மற்றும் கருந்துளைகளுக்கு இடையிலான வினோதமான மோதல்கள் என பல செயல்பாடுகள் நடக்கின்றன.

இவ்வாறு வெடிக்கும் வானியல் நிகழ்வுகள் நமது பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாகும். அவற்றின் இயற்பியல் பண்புகள் மற்றும் செயல்முறைகள் பற்றி நமக்கு இன்னும் தெளிவாக தெரியவில்லை. அவற்றை ஆய்வு செய்பவதன்மூலம்,பிரபஞ்சம் எதனால் ஆனது? தீவிர பிரபஞ்சத்தை இயக்கும் இயற்பியல் விதிகள் என்னென்? நட்சத்திரங்கள் எவ்வாறு உருவாகி அழிகின்றன? என்பது போன்ற மிக அடிப்படையான அறிவியல் கேள்விகளுக்கு சிறப்பாக பதிலளிக்க உதவியாக இருக்கும்” என்றார்.

(Visited 7 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content