இலங்கை

இலங்கையில் உச்சம் தொட்ட மரக்கறி மற்றும் மீனின் விலைகள்!

இலங்கையில் பண்டிகைக்  காலங்களைத் தொடர்ந்து தொடர்ச்சியாக மரக்கறிகளின் விலை உச்சம் கண்டு வருவதாக பொருளாதார மத்திய நிலையங்களின் தரவுகள் தெரிவித்துள்ளன.

இதன்படி  ஒரு கிலோ காரட் சுமார் ஆயிரம் ரூபாவாகவும், ஒரு கிலோ பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி இரண்டாயிரம் ரூபாயை நெருங்குவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் மீன் மார்க்கெட்டில் மொத்த விலையும் நுகர்வோரால் தாங்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது.

இதன்படி பேலியகொடை மீன் மார்க்கெட்டில் கெரவல் மீனின் கிலோவொன்றின் விலை 2000 ரூபாவாகவும், பாலையா 1000 ரூபாவாகவும்,  தோரை 1,800 ரூபாவாகவும், பாறை மீன்  1,500 ரூபாவாகவும், லின்னா 800 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக பயிர்கள் அழிந்து வருவதே இதற்கு காரணம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் நுகர்வோருக்கு விற்பனை செய்யும் விலைக்கு நிகராக விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்யப்படுவதில்லை என விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!