ஜோர்தானில் சிக்கித் தவிக்கும் 300 இலங்கையர்கள்!
ஜோர்தானில் உள்ள சஹாப் பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த சுமார் 350 இலங்கையர்கள் உணவு மற்றும் பொருட்கள் இன்றி சுமார் ஒன்றரை வருடங்களாக சம்பளம் வழங்கப்படாமையால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தூதரகத்திற்கு தகவல் தெரிவித்தும் விசாரணை நடத்தப்படவில்லை என கூறப்படுகிறது.
இதன்படி உயிர்ச்சேதம் ஏற்படுவதற்கு முன்னர் தம்மை இலங்கைக்கு அழைத்து வருமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
(Visited 17 times, 1 visits today)





