இலங்கை

இலங்கைக்கு சட்டவிரோதமாக தங்கத்தை கொண்டுவந்த பெண்ணுக்கு நேர்ந்தக் கதி!

இந்தியாவில் இருந்து 12 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்திய பெண்ணுக்கு 11 கோடியே எண்பது இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அபராதத் தொகையை உடனடியாக செலுத்துவதற்கு உத்தரவிட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி சுங்கப் பணிப்பாளர் சிவலி அருக்கொட தெரிவித்தார்.

குறித்த இந்தியப் பெண் நேற்று (22) அதிகாலை துபாயிலிருந்து 500 கிராம் எடையுள்ள நகைகளை சட்டவிரோதமான முறையில் தனது உடலிலும் கைப்பையிலும் மறைத்துக்கொண்டு நாட்டிற்கு வந்துள்ளார்.

இது தொடர்பான சுங்க விசாரணை நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலைய சிரேஷ்ட பிரதி சுங்க பணிப்பாளர் கமால் பெர்னாண்டோவினால் மேற்கொள்ளப்பட்டு, சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த நகைகளை பறிமுதல் செய்ய உத்தரவிட்டதுடன், அதற்கான தண்டப்பணத்தையும் செலுத்துமாறு உத்தரவிட்டார்.

இதன்படி, அவர் கொண்டு வந்த நகைகளின் பெறுமதியான 12 கோடி ரூபாயும் அபராதத் தொகையான சுமார் 12 கோடி ரூபாயும் சேர்த்து ஏறக்குறைய இருபத்து நான்கு கோடி ரூபாய் பாரிய இழப்பை அந்த பெண் சந்திக்க நேரிட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

(Visited 14 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!