இலங்கை

இலங்கையில் தரமற்ற தடுப்பூசி கொள்வனவு : முன்னாள் சுகாதார அமைச்சர் வெளியிட்ட தகவல்!

தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசியை இறக்குமதி செய்தமை தொடர்பில் தாம் முதல் முறைப்பாட்டாளர் எனவும் எனவே தன்னிடம் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தனது முறைப்பாடு தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற விரும்பினால் தாம் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

“நான்தான் புகார்தாரர். புகார் தொடர்பாக பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை. புகார் என்பது அறிக்கை. புகார்களின் அனைத்து விவரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. புகார் தொடர்பான கூடுதல் விவரங்களை நீங்கள் எப்போதாவது பெற வேண்டியிருந்தால், கேட்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!