இலங்கை

இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை: ஜி. எல். பீரிஸ்

ஜனாதிபதி தான்தோன்றிதனமாக அரசியலமைப்பு பேரவையின் செயற்பாடுகளில் தலையை நுழைக்கின்றார். இது அரசியலமைப்பை மீறும் செயற்பாடாகும். இதனை அடிப்படையாக வைத்து, ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவருவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என சுதந்திர மக்கள் பேரவையின் செயற்குழு உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ், திங்கட்கிழமை (11) தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் ஜி. எல். நாவல சுகந்த ஜனதா சபையின் பிரதான காரியாலயத்தில் திங்கட்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அமுல்படுத்தியதன் மூலம் சர்வதேச சமூகம் இலங்கைக்கு சிவப்பு விளக்கு காட்டியுள்ளதாகத் தெரிவித்த பேராசிரியர், தேர்தல் காலத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என சர்வதேச சமூகம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!