ஐரோப்பா

ஸ்பெயின் – இத்தாலி பொலிஸாரிடம் சிக்கிய கும்பல் – விசாரணையில் வெளிவந்த தகவல்

ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் உள்ள பொலிசார் 11 பேரை கைது செய்து 5,000 லிட்டருக்கும் அதிகமான கலப்பட ஆலிவ் எண்ணெயை கைப்பற்றியுள்ளனர்.

சர்வதேச கும்பலை இந்த குழுவினர் மலிவான எண்ணெய்களை அதிக விலைக்கு சமமானதாக மாற்றி இலாபம் தேட முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சியுடாட் ரியல் பகுதியில் ஆலிவ் எண்ணெயை ஏற்றிச் சென்ற லொரியை ஆய்வு செய்தபோது, இந்த குழுவினர் வழங்கிய தொடர்ச்சியான முரண்பாடுகளை கொண்ட கருத்துகளினால் சந்தேகமடைந்துள்ளனர்.

இதன் போதே முதலில் சந்தேகம் எழுந்தது. ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் கலப்படம் செய்யப்பட்ட ஆலிவ் எண்ணெயை உலக சந்தையில் விநியோகிக்க வடிவமைக்கப்பட்ட இரு முனை நடவடிக்கையை அவர்கள் விரைவில் கண்டுபிடித்தனர்.

ஸ்பெயினில், குறைந்த வகை எண்ணெய்களை கையகப்படுத்துவதில் தொடர்புடைய ஒரு நிறுவனத்தைப் பயன்படுத்தி, மோசமான தரமுடைய எண்ணெய்களில் மாற்றங்களைச் செய்து, அவற்றின் ஆவணங்களை பொய்யாக்கி விற்கும் நடவடிக்கை ஒன்று இடம்பெறுவதாக இதன் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!