இலங்கை செய்தி

14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த மூவர் கைது

 

 

 

பெற்றோரின் பராமரிப்பை இழந்த 14 வயது சிறுமியை தொடர்ச்சியாக துஷ்பிரயோகம் செய்த அவரது தாத்தா உட்பட மூவரை மொரகஹாஹேன பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த மேலும் சிலரைக் கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹொரண மொரகஹஹேன பிரதேசத்தில் பாட்டியின் பாதுகாப்பில் இருந்த 14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் 80 வயதுடைய தாத்தா உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மற்ற இருவரும் சிறுமியின் அத்தை மற்றும் பாட்டியின் பிள்ளைகள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியின் மாமா என கூறப்படும் ஒருவரும், பாடசாலை மாணவர் ஒருவர் உட்பட இருவர் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமியின் தாயார் சிறுமி இளவயதில் வெளிநாடு சென்றதாகவும், தந்தை தனித்தனியாக வசித்து வருவதாகவும் சிறுமிக்கு பொறுப்பாக இருந்த பாட்டி தெரிவித்துள்ளார்.

சிறுமிக்கு உள்ளூர் நபர் ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும், இரவு நேரத்தில் அவர் வீட்டிற்கு வருவதாகவும் அயலவர் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையிடம் முறைப்பாடு செய்திருந்ததுடன், சிறுமியின் பாடசாலை ஆசிரியர்களும் இது தொடர்பில் பாட்டியிடம் கேட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், சிறுமியை பொலிஸாருக்கு அழைத்து வந்த விசாரணைகளின் போது, ​​இந்த துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!