இலங்கை

பரீட்சையில் பார்த்து எழுதி மாட்டிக்கொண்ட எம்.பி…

சட்டக் கல்லூரி அனுமதி போட்டிப் பரீட்சையில் விடைகளை பார்த்து எழுதிய MP தொடர்பான தகவல் கிடைத்துள்ளது.

தென் மாகாணத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரே இவ்வாறு பார்த்து எழுதியுள்ளார் என்றும், அதுதொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.சட்டக் கல்லூரிக்கான அனுமதி பரீட்சையானது பரீட்சை திணைக்களத்தினால் நடத்தப்படுகிறது. கடும் நிபந்தனைகளுடன் இந்த பரீட்சை நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த MPதான் கொண்டுவந்திருந்த சில தாழ்களில் விடைகளை எழுதி வைத்திருந்து அதனை பார்த்து எழுதியுள்ளார் என்று தகவல்கள் கிடைத்ததன் பின்னர் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.எனினும் இந்த விசாரணைகளிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக அந்த MP அரசியல் வாதிகளிடம் கடுமையான கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிடம் வினவியபொழுது, இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் தனக்கும் சில தகவல்கள் கிடைத்துள்ளன என்று தெரிவித்தார்.

(Visited 20 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!