இலங்கை

திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளராக பொறுப்பேற்று கொண்ட திருமதி.பி.கயல்விழி

திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளராக வைத்தியர் திருமதி.பி.கயல்விழி கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பதவிக்கு வருடார்ந்த இடமாற்றத்தின் அடிப்படையிலும் தகுதியின் அடிப்படையிலும் திருமதி.பி.கயல்விழி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.அதன் அடிப்படையில் அவர் தனது கடமைகளை இன்று (25) பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் மூதூர் தள வைத்தியசாலையின் அத்தியட்சகராகவும், திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை வைத்தியசாலையில் பல்வேறுபட்ட குறைபாடுகள் நிலவுவதாகவும் அவை சீர் செய்யப்பட்டு நோயாளர்களுக்கு சிறந்த சேவையினை வழங்க வேண்டும் எனவும் அதற்காக குறித்த பிரதிப்பணிப்பாளர் செயற்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த பதவியேற்பு நிகழ்விற்கு ஊடகவியலாளர் சென்றிருந்த போதிலும் கடமையேற்பதை புகைப்படம் எடுப்பதற்கு விருப்பம் தெரிவிக்கப்படவில்லையெயவும் குறிப்பிடத்தக்கது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content