ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் நாடு கடத்துவதற்கான விதிமுறைகளில் திருத்தம்!

ஆஸ்திரேலியாவில் குழந்தையின் இயலாமை அல்லது நோய் காரணமாக குடும்பத்தை நாடு கடத்துவதற்கான விதிமுறைகளில் திருத்தம் செய்வதற்கான திட்டத்தை பசுமைக் கட்சி சமர்ப்பித்துள்ளது.

நிரந்தர குடியுரிமை வழங்காமல் தற்காலிக விசாவில் மக்களை நாடு கடத்துவதற்கு இதுபோன்ற விதிகளை மாற்றுவது குறித்து ஆய்வு செய்து வருவதாக குடிவரவு அமைச்சர் ஆண்ட்ரூ கில்ஸ் தெரிவித்தார்.

அத்தகைய நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையை ஆதரிப்பதால், 10 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய பொதுமக்களுக்கு 51,000 டொலர்கள் செலவாகும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் விசா மறுப்புச் செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த ஒழுங்குமுறை மாற்றம் தொடர்பில் உள்நாட்டலுவல்கள் திணைக்களத்தின் சிரேஷ்ட வைத்திய அதிகாரியினால் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பசிபிக் நாடுகளின் குடிமக்களுக்கு ஆஸ்திரேலியாவில் பணிபுரிய 3,000 விசா வழங்கும் திட்டத்திற்கு ஆதரவளிக்க பசுமைக் கட்சியும் முடிவு செய்துள்ளது.

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!