இலங்கை செய்தி

பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி திருகோணமலையில் துண்டு பிரசுரம் விநியோகம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட உள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனக்கோரி திருகோணமலையில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.

தமிழ் தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிரேஷ்ட சட்டத்தரணி ஸ்ரீ காந்தா தலைமையில் உத்தியோகபூர்வமாக விநியோகிக்கப்பட்டது.

எதிர்வரும் 20ம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கு மாகாணங்களில் பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து துண்டு பிரசுரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த ஹர்த்தாலுக்கு இலங்கைத் தமிழரசு கட்சி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி, ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரவு வழங்க உள்ளதாகவும் தெரிய வருகின்றது.

(Visited 8 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!