இலங்கை செய்தி

பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு தற்காலிக பாலம்

அரச அபிவிருத்தி மற்றும் வடிவமைப்பு கூட்டுத்தாபனம் பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு தற்காலிக பாலம் அமைக்கும் பணியை ஆரம்பித்துள்ளது.

புகையிரத நிலையத்தில் பாழடைந்த பயணிகள் மேம்பாலத்திற்கு பதிலாக புதிய மேம்பாலம் கட்டும் வரை பயன்பாட்டிற்காக தற்காலிக பாலம் கட்டப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த பயணிகள் மேம்பாலத்தின் தூண்களுக்கு பயன்படுத்தப்பட்ட இரும்பு கம்பிகள் கடல் அரிப்பு மற்றும் பிற காரணங்களால் காலப்போக்கில் பழுதடைந்து தற்போது பாலம் பழுதடைந்த நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

குறுகிய காலத்தில் தற்காலிக பாலம் கட்டி முடிக்கப்பட்டு, தற்போது இந்த இடத்தில் புதிய மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அண்மையில் வழங்கப்பட்ட பணிப்புரைக்கு அமைய இது மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!