இலங்கை

இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள பேரிடி : அடுத்த மாதம் முதல் மின்கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்!

வறண்ட காலநிலை நிலவிய மாதங்களில் அனல் மின் உற்பத்திக்கான செலவினங்களை ஈடுசெய்ய வேண்டியதன் அவசியத்தை காரணம் காட்டி, மீண்டும் மின்சார கட்டணத்தை அதிகரிக்க  இலங்கை மின்சார சபை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL) கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக வரும் ஜனவரி மாதம் முதல்  மின் கட்டண உயர்வை கோரியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், ஒக்டோபர் மாதமே மின்கட்டண உயர்வை கோரியிருந்ததாக   கலாநிதி நரேந்திர டி சில்வா தெரிவித்தார்.

இவ்வருடம் போதிய அளவு நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் போனதால், மின் உற்பத்திக்கான கூடுதல் செலவை இலங்கை மின்சார சபை ஏற்க நேரிட்டதாக அவர்  குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே அனைத்து மின் கட்டணங்களுக்கும் சமூக பாதுகாப்பு வரி சேர்க்கப்படும் என்று லங்கா மின்சார (பிரைவேட்) கம்பெனி லிமிடெட் (லெகோ) நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்தமாதம் வழங்கப்படவுள்ள மின்கட்டணத்தில் இந்த வரி சேர்க்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆகவே அடுத்த மாதம் முதல் மீண்டும் மின் கட்டணங்களில் அதிகரிப்பு ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்