இலங்கை செய்தி

வெளிநாட்டுப் பணியாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணம் அதிகரித்துள்ளது

வெளிநாட்டுப் பணியாளர்கள் இந்நாட்டிற்கு அனுப்பும் பணத்தின் அளவு 74.4 சதவீதம் அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி கடந்த ஓகஸ்ட் மாதம் நாட்டிற்குக் கிடைத்த வெளிநாட்டுப் பணம் 499.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

இதன்படி, இவ்வருடம் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையான காலப்பகுதியில் 3,862,700 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுப் பணம் அனுப்பப்பட்டுள்ளது.

2022 இல் தொடர்புடைய காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இது 74.4 சதவீதம் அதிகமாகும். கடந்த ஜூலை மாதம், நாடு 541 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான வெளிநாட்டுப் பணத்தைப் பெற்றுள்ளது.

இது 2022ல் இருந்து இரண்டு மடங்கு அதிகமாகும். இதேவேளை, 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(Visited 7 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை