தென்னாப்பிரிக்காவில் தீவிபத்து – 73 பேர் உயிரிழப்பு!

தென்னாப்பிரிக்காவின் ஜொகனஸ்பேர்கில் இடம்பெற்ற தீவிபத்தில் 73 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜோகன்னஸ்பர்க்கில் நள்ளிரவில் குறித்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் 07 குழந்தைகள் உள்பட 73 பேர் உயிரிழந்துள்ளதுடன். 52 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவசரகால சேவைகளின் செய்தித் தொடர்பாளர் ராபர்ட் முலாட்ஸி, இறப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று எச்சரித்துள்ளார். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் எனவும் அவர் கூறிள்ளார்.
(Visited 10 times, 1 visits today)