இலங்கை

தண்ணிமுறிப்பில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர்களின் பூர்வீக காணிகள்!! கண்ணீருடன் தாய்யொருவர் விடுத்துள்ள கோரிக்கை

நடு வயலுக்குள்ளால் கல்லுகளை தாட்டு வயல் செய்ய விடாது தடுத்து வைத்திருக்கிறார்கள் என முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு பூர்வீகத்தையுடைய தாய்யொருவர் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

தண்ணிமுறிபபு குருந்தூர் மலை பகுதியில் தமிழ் மக்களினுடைய பூர்வீக காணிகள் தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த காணிகளை விடுவிப்பது தொடர்பில் நேற்றையதினம் (28) அரசியல் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் விஜயம் செய்து நிலைமைகளை நேரில் அவதானித்திருந்தனர்.

குறித்த கள விஜயத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தாய்யொருவர் கூறுகையில்,

”எங்களுடைய காணிகளை பிடித்து வைத்திருக்கிறார்கள். நாங்கள் இடம்பெயர்ந்து சென்று பல வருடங்களாகியும் விவசாயம் செய்யும் காணிகளை கூட தடை செய்திருக்கிறார்கள்.

நடு வயலுக்குள்ளால் கல்லுகளை தாட்டு எங்களை வயல் செய்ய விடாது தடுத்து வைத்திருக்கிறார்கள். நாங்கள் எத்தனையோ வருடங்களாக அலைந்து திரிகிறோம்.

கொழும்புக்கு சென்று ஜனாதிபதியை சந்தித்தும் வந்தோம். அப்போது உங்களுடைய காணி உங்களுக்கு தான் அம்மா வேறு யாருக்கும் இல்லை. நீங்கள் யோசிக்க வேண்டாம். போங்கோ என கூறியிருந்தார்.

கடைசி விஜயம் என கூறிவிட்டு வந்து எல்லாத்தையும் குழப்பீட்டு போகிறார்கள். இன்றும் விடுவித்து தரவில்லை. நாங்கள் இதற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இதற்கு ஒரு முடிவு வேணும். எங்களுடைய காணியை எங்களுக்கு தாங்கோ.

வேறு இடங்களிலும் எமக்கு காணி இல்லை. யாரிடமாவது விசாரித்து பாருங்கள். தண்ணிமுறிப்பில் தான் எமக்கு காணி . குடியிருப்பு காணி என்றாலும் , வயல் காணி என்றாலும் இங்கு மட்டும் தான் உள்ளது. எனக்கு எட்டு பிள்ளைகள். இவர்களுக்காவது இந்த காணிகள் வேண்டும். என்னத்துக்காக எமது காணிகளை பிடித்து வைத்து கொண்டிருக்கிறார்கள்.

இனி எங்களால் ஏலாது. காணியின் முடிவை வெகு விரைவில் விடுவித்து தர வேண்டும் என கேட்டு கொள்கிறேன்” என தெரிவித்தார்.

(Visited 5 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்