வெள்ளவத்தையின் பல பகுதிகளில் மின்தடை!
மின்கம்பி ஒன்று சேதமடைந்துள்ளதால் வெள்ளவத்தையின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
இதன்படி வெள்ளவத்தை டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தை பகுதியில் மின்சார கேபிள் ஒன்று சேதமடைந்துள்ளது.
இதேவேளை, பல பிரதேசங்களுக்கு ஜெனரேட்டர்களை பயன்படுத்தி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் மின்சார விநியோகத்தை சீர்செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை இலங்கை மின்சார சபை தற்போது முன்னெடுத்து வருவதாக அறிவித்துள்ளது.
(Visited 16 times, 1 visits today)





