டொமினிக்கன் குடியரசு தலைநகரில் வெடிவிபத்து – 10பேர் பலி, 50க்கு மேற்பட்டோர் காயம்

டொமினிக்கன் குடியரசின் தலைநகருக்கு அருகே ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் பலியான நிலையில், மாயமான 11பேரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
திங்கட்கிழமையன்று சான் கிறிஸ்டோபல் நகரில் சந்தை பகுதியில் செய்ல்பட்டு வரும் பேக்கரி ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டு, அருகிலிருந்த ஹார்டுவேர் மற்றும் பர்ணிச்சர் கடைகளுக்கும் தீ பரவியது.
இதில் 4மாத குழந்தை உட்பட 10பேர் உயிரிழந்தனர் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில்,11பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தநிலையில் வெடிவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக டொமினிக்கன் குடியரசு அதிபர் லூயிஸ் அபினாடர் தெரிவித்துள்ளார்.
(Visited 11 times, 1 visits today)